இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

நெடுந்​தீவு அருகே மீன் பிடித்​துக் கொண்​டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்​தனர். இலங்​கைக்கு அருகே தென்​கிழக்கு வங்​கக் கடலில் ஏற்​பட்​டிருந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் காரண​மாக கடந்த ஒரு வார​மாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்​குச் செல்ல அனு​ம​திச் சீட்டு வழங்​கப்​பட​வில்​லை. இதனால் மீனவர்கள் கடலுக்​குச் செல்​ல​வில்​லை.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் வானிலை இயல்பு நிலைக்​குத் திரும்​பியதைத் தொடர்ந்து நேற்று ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்கள் 2 ஆயிரம் பேர் 400-க்​கும் மேற்​பட்ட படகு​களில் கடலுக்​குச் சென்​றனர்.

நெடுந்​தீவு அருகே மீன் பிடித்​துக் கொண்​டிருந்த தென்​னரசு என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகை சுற்​றிவளைத்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி படகில் இருந்த மீனவர்கள் ஜார்​ஜ், சுதன், கனக​ராஜ் சுமித், பரலோக​ராஜ், கோபி, ஆரோக்​கிய ரூபட், பிரேம்​கு​மார், தினேஷ், ராஜேஸ் ஆகியோரைக் கைது செய்​தனர்.

பின்​னர் அவர்​களை காரைநகர் கடற்​படை முகா​முக்​குக் கொண்டு சென்​று, இலங்கை மீன்​வளத் துறை​யினரிடம் ஒப்​படைத்​தனர். தொடர்ந்​து, கைது செய்​யப்​பட்ட மீனவர்கள் மீது குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​து, ஊர்​காவல்​துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்.